தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் விளக்கம்!!

1
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் சென்னை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, தீவிர கொரோனா பரவல் தடுக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை – மருத்துவர் அறிவுரை!!

இதனால் பள்ளிகள் திறப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாத ஊரடங்கு தளர்வுகளில் முக்கியமானதாக 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்களும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறந்து சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை தொடங்குமாறு அறிவிக்கப்பட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி – முதல்வர் அறிக்கை!!

அதன்படி வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையில் பிற (1 முதல் 8ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது கடந்த ஆண்டை போல் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்படுமா? என சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் – முதன்மை கல்வி அலுவலர் தகவல்!!

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பிற வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து முதல்வர் தான் அறிவிப்பார் என திட்டவட்டமாக அமைச்சர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!