அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எச்சரிக்கை !!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியர்கள் :
தமிழகம் முழுவதும் மொத்தமாக அரசின் கட்டுப்பாட்டில் 12,500 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றது. இவற்றில் ஆசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற ஆசிரியரல்லாத பணிகளுக்கு பல்வேறு காலி இடங்களும் உள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல்வேறு பட்டதாரிகள் பணியமர்த்தப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக கொரோனா தொற்றினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
அமைச்சர் எச்சரிக்கை !
அதன் காரணமாக பல அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில்லாமல் ஓய்வில் இருகின்றனர். இதனால் அவர்கள் தனியார் பள்ளிகளில் பாடங்கள் நடத்த உதவுவதாகவும், பகுதி நேரமாக இந்த பணிகளில் ஈடுபடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்