பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது – கல்வித்துறை அதிரடி

0
பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது - கல்வித்துறை அதிரடி
பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது - கல்வித்துறை அதிரடி

பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது – கல்வித்துறை அதிரடி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது. தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.

அதற்கான அறிவிப்புகளை அவ்வப்போது கல்வித்துறையும் அறிவித்து வருகிறது. சமீபத்தில் ஆசிரியர்கள் அனைவரும் வரும் 8 ஆம் தேதிக்குள் தாக்கினால் பணிபுரியும் மாவட்டத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதே போல் தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதாவது ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி மாவட்டம் மற்றும் வட்டார அளவில் பணிபுரியும் ஆசிரியர்கள் அருகிலுள்ள பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தேர்வு தேதி நெருங்கி வருவதால் மேலும் பல அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது. தேர்வர்கள்,இது போன்ற தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!