தமிழகத்தில் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

0
தமிழகத்தில் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு கோடை வெயிலின் காரணமாக இரண்டு முறை தள்ளிப்போனது. அதே போல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு பள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முக்கிய முடிவை தமிழக அரசு எப்போது  வெளியிடும் என மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களின் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகள் எட்டாம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. ஒன்பதாம் வகுப்பை பொறுத்தவரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் முடிவடைய உள்ளன. மேலும் சில தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் அடுத்ததாக பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதன்படி வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மக்களவை பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளதால், அதுவரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அதற்குப்பின் ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை என்பதால் அன்று பள்ளிகள் திறக்க  அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பத்தை தாண்டி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால், பள்ளிகள் திறப்பு ஜூன் 4ம் வாரம் வரை தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முக்கிய முடிவை தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!