தமிழகத்தில் கடந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு கோடை வெயிலின் காரணமாக இரண்டு முறை தள்ளிப்போனது. அதே போல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு பள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முக்கிய முடிவை தமிழக அரசு எப்போது வெளியிடும் என மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களின் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகள் எட்டாம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. ஒன்பதாம் வகுப்பை பொறுத்தவரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் முடிவடைய உள்ளன. மேலும் சில தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது.