தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கான உத்தரவு ரத்து !!! – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 16ம் நாள் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த உத்தரவினை தற்போது ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் மீண்டும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் தேதியினை பரிசீலித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
பள்ளிகள் திறப்பு !
கொரோனா அச்சத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மட்டுமே நடப்பு கல்வியாண்டு செயல்பட்டு வருவதால் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு பெற்றோர்கள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
பெற்றோர்கள் எதிர்ப்பு !!
அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றே பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும், இது தொடர்பான வழக்கிலும் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்னர் திறக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உத்தரவு ரத்து !
இதன் காரணமாக அனைத்து கூறுகளையும் ஆராய்ந்த தமிழக அரசு நவம்பர் 16ம் நாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த உத்தரவினை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. தற்போது ஒத்தி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு ஆனது மீண்டும் பொங்கலுக்கு பிறகு தான் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |