தமிழக பள்ளிகள் பராமரிப்பு நிதிக்கான அறிக்கை – மார்ச் மாதம் சமர்ப்பிக்க உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக வழங்கப்பட்ட பராமரிப்பு நிதிக்கான அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி பராமரிப்பு நிதி:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பள்ளி பராமரிப்பு பணிகளுக்காக மானியக்குழு நிதியை வழங்குகிறது. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கான நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
முதுநிலை நீட் தேர்வில் புதிய மாற்றங்கள் – மாணவர்கள் குழப்பம்!!
பராமரிப்பு பணிகள்:
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியின் மூலம் பள்ளிகள் தங்கள் வளாகத்தில் உள்ள பழுதுகளை நீக்கவும், ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்கவும், மின் சாதனங்கள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், அடல் திங்கரிங் ஆய்வகம் அமைத்தல், கூடுதல் கட்டமைப்பு பணிகள் போன்ற சிறப்பு திட்டங்களுக்கும் அவ்வப்போது நிதி ஒதுக்கப்படும்.
அறிக்கை:
நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் வழங்கப்பட்ட பராமரிப்பு நிதியை இம்மாத இறுதிக்குள் செலவழித்து பராமரிப்பு பணிகளுக்கான அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பித்தால் மத்திய அரசு சார்பில் அடுத்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்