தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ! – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (07.04.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்ட மன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்று (06.04.2021) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் தேர்தலுக்காக 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்குச் சாவடிகளில் மொத்தமாக 18,832 பேர் தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மொத்தமாக அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத பணியாளர்கள் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்த தேர்தலில் இரவு 07 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அதன் பின்னராக அவற்றினை முறையாக தேர்தல் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு வெளியேற தாமதமாகும் என்பதனால் மறுநாள் (07.04.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதனை பரிசீலித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்தலுக்கு மறுநாளான ஏப்ரல் 07 ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். மேலும் இந்த விடுமுறை நாள் மற்றொரு நாளில் ஈடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.