கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச உதவித்தொகை !! – ஆட்சியர் அழைப்பு

0
கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச உதவித்தொகை !! - ஆட்சியர் அழைப்பு
கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச உதவித்தொகை !! - ஆட்சியர் அழைப்பு
கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச உதவித்தொகை !! – ஆட்சியர் அழைப்பு

கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆனது வருடந்தோறும் வழங்கப்படும். அதன்படி இந்த கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

கல்வி உதவித்தொகை :

இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் இனத்தினை சேர்ந்தவர்கள் மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த இனத்தினை சேர்ந்த மாணவ மாணவியர்கள் அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களாக இருந்தால் அவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் அரசு, அரசு உதவி பெறும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை 3ம் ஆண்டு பயில்பவர்களாக இருந்தாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதியே இறுதி நாள் ஆகும். அதற்குள் சம்பத்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!