தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் தேர்ச்சியும் வழங்கப்பட்டு விட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு ஆன்லைன் வழியாகவும் மேலும் தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது அடுத்த கல்வியாண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் அறிவிப்புகளை வெளியிட்டது, ஆனால் அதன் பிறகு அரசிற்கும் தனியார் பள்ளிகள் இயக்குனகரத்திற்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையினால் கல்விக்கட்டணம் 3 தவணைகளாக செலுத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தது. இதனால் பெற்றோர்கள் பலர் கல்வி கட்டணம் செலுத்தி உள்ளனர்.ஆனால் பெரும்பாலானோர் இன்னும் கட்டணம் செலுத்தவில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்