தமிழகத்தில் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு !!
தமிழகத்தில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிச.2ந்தேதி முதல் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது போல் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்லூரிகள் மூடல் !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. மத்திய அரசு கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து பல மாநிலங்களில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகள் திறப்பு !
இந்நிலையில் டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும் என தமிழக அரசு முன்னர் அறிவித்து இருந்தது. அதாவது, அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும் டிச.2ந்தேதி கல்லூரி, பல்கலைக்கழங்கள் திறக்கப்படுகிறது. டிசம்பர் 2ந்தேதி திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படும் என்றவாறு அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக அவை தள்ளிபோக வாய்ப்புள்ளதாக, பரவலாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி டிசம்பர் 02ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தற்போது தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்