தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வளாகத்தை அரசின் வழிகாட்டுதல்களின் படி தூய்மை செய்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
CEO அறிவுறுத்தல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகளுடன் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
WhatsApp செயலியில் புதிய அம்சம் அறிமுகம் – Starred Messages வசதிகள்!
கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விரைவில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நவம்பர் 12ம் தேதி 3, 5, 8, 10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவு ஆய்வுத்தேர்வு நடைபெறவுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இத்தேர்வை நடத்த உள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேசிய அடைவு ஆய்வு தேர்வில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – 97,831 பேர் வேட்புமனு தாக்கல்!
மேலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது அவசியம், அவற்றை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.