தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – 97,831 பேர் வேட்புமனு தாக்கல்!
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது விடுபட்ட அந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வார்டு மறு வரையறை செய்யப்பட்டதால் அந்த 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு கொரோனா நோய்த்தொற்று பரவி வந்த காரணத்தால் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!
தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உடனே விடுபட்ட அந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் வரும் செப்-15 தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்கும் பொருட்டு செப்.15ம் தேதி முதல் செப்.22ம் தேதி வரை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகள் – இன்று முதல் தொடக்கம்!
மேலும் செப்.23ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், வருகிற செப்.25 ம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்குவதற்கு கடைசி நாள் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்றுடன் (செப் 22) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்த நிலையில் 9 மாவட்டங்களில் உள்ள 27,003 இடங்களுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.