தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா.. தமிழக அரசு விடுத்த அதிரடி உத்தரவு..!!
கடந்த சில நாட்களுக்கு முன் ஆசியாவின் இரு முக்கிய நகரங்களான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும், தொற்று பரவல் காரணமாக சில உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தொற்றை கட்டுக்குள் வைக்க தீவீர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொற்று குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ECIL ஆணையத்தில் ரூ.20,480/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 40+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
அதாவது, சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்றும், இந்தியாவில் தொற்று கட்டுக்குள் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து, “தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது”.


























