தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் அதன் வாயிலாக பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சி முகாமை நடத்த உள்ளது.
பயிற்சி முகாம்:
இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனி யூடியூப் சேனலை உருவாக்கி அதனை திறமையாக நடத்தி வருகின்றனர். அந்த youtube சேனல் வாயிலாக தங்களது திறமைகளையும் தனக்கு தெரிந்தவற்றையும் மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலமாக பலர் நல்ல வருமானத்தையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் அதன் வாயிலாக தனது பொருட்களை இணையதளத்தில் சந்தைப்படுத்தல் குறித்து பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக ஜனவரி 9ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2 – வது பயிற்சி முகாம் ஜனவரி 29 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பிற்கு ரூ. 4000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை பெற விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.