தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ???
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு துறைகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்தி முடிப்பது மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பது பெரும் சவாலான விசயமாக அமைந்துள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் பள்ளிகளை ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
10, 12 ஆம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு புதிய அறிவிப்பு !!!!
பள்ளிகள் திறப்பு
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அதில், ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் வகுப்புகளை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பள்ளிகளை திறந்தால் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காலை, மாலை என இரு பிரிவுகளாக பிரித்து வகுப்புகளை நடத்துவது மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பாடங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |