தமிழக கல்வித்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவல் எதிரொலி!!
கல்வி நிறுவனங்கள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்வதற்காக திறனறி தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை திட்டம்!!
கட்டுப்பாடுகள்:
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அரசு, இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக கல்வித்துறைக்கு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து வரும் நிலையில், அவை ஏப்ரல் 23ம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும். மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறுஉத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும், அவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்த வேண்டும். கோடைகால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்