தமிழகத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை திட்டம்!!

0
தமிழகத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத் துறை திட்டம்!!
தமிழகத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத் துறை திட்டம்!!
 தமிழகத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை திட்டம்!!
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு காரணமாக தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலான அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்து வருவதால், நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை – ராமதாஸ் கோரிக்கை!!

பொது போக்குவாரத்து:

வழக்கமாக இரவு நேரங்களில் தென் தமிழகத்திற்கு அதிகமான அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். இரவு நேர ஊரடங்கில் தனியார் மற்றும் பொது போக்குவரத்துகளை அரசு இரவு 10 மணி முதல் தடை செய்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் தென் தமிழகத்துக்கு இயங்கும் போக்குவரத்து சேவையை போக்குவரத்துக்குத் துறை அதிகாரிகள் முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதிக பேருந்துகள்:

வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் அந்தந்த ஊர்களுக்கு சென்று சேரும் வகையிலும், நாளை முதல் பகல் நேரங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!