தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அதிமுக குற்றச்சாட்டு!

0
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அதிமுக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அதிமுக குற்றச்சாட்டு:

திமுக ஆட்சி அமைத்தால் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 வழங்குவோம் என்ற வாக்குறுதியை தந்தது. இதுவரையில் இந்தத் திட்டத்திற்கான எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என அதிமுக குற்றம் சாட்டி உள்ளது. நீட் நுழைவுத் தேர்விற்கு விலக்கு என வாக்குறுதி கொடுத்து விட்டு, அதையும் நிறைவேற்ற வில்லை. மேலும் ஏழு பேர் விடுதலை என்பதும் நடைபெறுமால் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு – லிட்டருக்கு 5 ரூபாய் வரை சரியும் விலை? இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் என்று அறிவித்துவிட்டடு, அதைத் தராமல் தற்போது அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனால் தமிழக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது.

அதாவது இல்லத்தரசிகளை விட அர்ச்சகர்கள் குறைவாக இருப்பதால், இந்த வாக்குறுதியை மோசடி செய்து வேறு பக்கம் திசை திருப்பவதாக தமிழக அரசை எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த, தாலிக்கு தங்கம் மற்றும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை இந்த அரசு நிறுத்தி அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதாக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!