ஊரடங்கிலும் மாணவர்களுக்கு சத்துணவு – தமிழக அரசு அசத்தல்
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் கிடைக்கும் மதிய உணவைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்புகளை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
இதற்கிடையில் கொரோனா தொற்று காலம் முடியும் வரை சத்துணவு பயனாளிகளுக்கு முட்டைகளையும் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆணையின் அடிப்படையில் தமிழக அரசு புதிதாக அரசாணை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்களுடன் செப்டம்பர் 2020 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு பயனாளிக்கு 10 முட்டைகள் வீதம் வழங்க சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் அடிக்கடி வருவதை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும் கல்வி உபகரணங்களை வழங்கும் போதே உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளையும் சேர்த்து வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கிலும் சத்துணவு வழங்கி வரும் தமிழக அரசின் இந்த அசத்தலான திட்டதிற்கு பல தரப்பிலும் இருந்து வரவேற்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்