மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி !!!!
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என அரசு அறிவித்தது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மூலம் தான் மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடர முடியும் என்பதால், மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை:
மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் பள்ளிகள் குளறுபடி செய்வதாக புகார் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், அமைச்சர் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து கண்காணிக்கப்படும் என்றும், மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் தனியார் பள்ளிகள் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் விடைத்தாள் இல்லை – 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல்