பள்ளிகளில் விடைத்தாள் இல்லை – 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல் !!!!

0
பள்ளிகளில் விடைத்தாள் இல்லை - 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல் !!!!
பள்ளிகளில் விடைத்தாள் இல்லை - 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல் !!!!

பள்ளிகளில் விடைத்தாள் இல்லை – 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல் !!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கம் குறையாததினால் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்து இருந்தது.

மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களின் வருகை பதிவேடு, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. விடைத்தாள்கள் இல்லாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என்றால் தேர்ச்சி எவ்வாறு வழங்கப்படுமென்பதில் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த சூழலினை தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள் சேகரிப்பு மற்றும் அவற்றை ஒப்படைக்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இனிவரும் நாட்களில் தேர்ச்சிக்கு மாற்று அறிவிப்பு ஏதும் வருகிறதா என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!