வாரத்தின் இறுதி நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. வாரத்தின் இறுதி நாளில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகைபிரியர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை சற்றும் குறையாமல் இருந்து வந்த நிலையில் பண்டிகை முடிந்து விலை குறையும் என்று எதிர்பார்த்தனர். இந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இன்றும் தங்கத்தின் விலை உச்சமடைந்துள்ளது 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை – அரசு உறுதி!
இதனையடுத்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,600 விற்பனையாகி வருகிறது. அதே போல, ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 5,825-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து கிராம் ரூபாய் 77 -க்கும் கிலோ ரூபாய் 77, 000 வருகிறது.