தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஷாக் நியூஸ் – வட்டியை செலுத்த அறிவுறுத்தல்!
5 சவரனுக்கும் குறைவாக வங்கிகளில் அடகு வைத்திருக்கும் ஏழை எளிய மக்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நகைகளுக்கான வட்டி மற்றும் அசலை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகைகளுக்கான வட்டி:
ஏழை எளிய மக்களின் விவசாய கடன் மற்றும் நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக சட்ட மன்ற தேர்தலின் போது திமுக சார்பில் கூறப்பட்டது. இதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொன்னபடி பல திட்டங்களையும் நேர்த்தியாக செய்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் அனைத்து ஏழை எளிய மக்களின் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு பிறகு இந்த நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் பல நிபந்தனைகளை புகுத்த ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? கல்வித்துறை திட்டம்!
அதாவது அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய நகைக்கடன் தள்ளுபடி எனவும் ஒரே வீட்டில் இருக்கும் இருவருக்கு இத்தகைய தள்ளுபடி கிடையாது எனவும் பல நிபந்தனைகளை புகுத்தினர். இதனால் நகைக்கடன் வாங்கிய 45 லட்சம் பேரில் 13 லட்சம் வாடிக்கையாளர்கள் தான் இத்தகைய நிபந்தனைகள் அனைத்திற்கும் உட்படுகின்றனர். இந்த 13 லட்ச வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வந்தன.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார், பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள்!
வங்கிகளில் நகைகளை வைத்த பிறகு பலரும் வட்டி எதுவுமே செலுத்தாமலே இருந்தனர். நகைக்கடன் தள்ளுபடியாகும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நகைக்கடன் தள்ளுபடியாகும் என நினைத்து வட்டி எதுவும் செலுத்தாமல் காத்து கொண்டிருந்தவர்களை உடனடியாக வட்டி மற்றும் அசலை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகைக்கடன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு வட்டி மற்றும் அசலை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.