SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார், பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள்!
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் எளிதாக இணையதளம் மூலமாகவே இணைக்கும் வகையில் இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.
பான் கார்டு இணைப்பு:
தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அத்தனை நல திட்டங்களுக்கும் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு என அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடிகளில் இருந்து தப்பிக்கொள்ளவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது அவசியம். அப்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும்.
மீண்டும் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? நெருக்கடியில் அரசு!
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தடையற்ற வங்கிசேவை கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும். இதனால் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மத்திய அரசு அவ்வப்போது கால அவகாசம் கொடுத்து வருகின்றனர். பான் கார்டு விவரங்களை வழங்காத பட்சத்தில் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பான் கார்டு விவரங்கள் தவறாக வழங்கப்பட்டிருந்தாலும் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஆதார் கார்டுடன் பான் கார்டுடன் இணைக்குமாறு நினைவுபடுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க விரும்பினால் மார்ச் 31 ஆம் தேதி வரை இணைத்து கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் (https://www.incometax.gov.in/