மீண்டும் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? நெருக்கடியில் அரசு!
சீனாவின் ஹாங்காங் நகரத்தில் கொரோனா பேரலை தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டிருப்பதாக கருத்துக்கள் எழுந்திருக்கிறது. இது குறித்த அரசின் முடிவை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவின் ஹாங்காங் நகரத்தில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் அதிகாரிகள் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மட்டுமே அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் ஹாங்காங் மக்களுக்கு 3 முறை கட்டாய கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அதே போல ஹாங்காங் நகரத்திற்கு வருபவர்கள் இரண்டு வாரம் வரைக்கும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட ஒன்பது நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம், இந்த வாரம் 7.4 மில்லியன் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை அறிவித்ததை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டால் குடும்பங்கள் பிரிக்கப்படும் என்ற கவலையை அந்நாட்டு குடியிருப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வீட்டிற்கு ஒருவர் என்ற வகையில் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 13 மில்லியன் மக்களைக் கொண்ட மாகாண தலைநகரான சியானில் கொரோனா தொற்று அதிகரிப்பால், சுமார் ஒரு மாதத்திற்கு முழுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனால் டிசம்பரின் பிற்பகுதியில் கொரோனா பாதிப்புகள் 80,000க்கும் மேற்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஹாங்காங்கில் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
இதற்கிடையில் ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மார்ச் மாத நடுப்பகுதியில் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தனிமையில் இருக்கக்கூடும் என்றும், ஒரு நாளைக்கு 180,000 க்கும் அதிகமான வழக்குகளை எட்டக்கூடும் என்றும் மதிப்பிடுகின்றனர். இப்போது பெய்ஜிங் சார்பு சட்டமியற்றுபவர் மைக்கேல் டியென், அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் சுருக்கமான ஷாப்பிங் பயணங்களுக்கு மட்டும் விதிவிலக்குகளுடன் ஒன்பது நாள் பூட்டுதலை ஆதரிக்கிறார். என்றாலும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஹாங்காங் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.