சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகைப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்து கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் திறப்பு!
அதன் தொடர்ச்சியாக தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் அத்திவாசிய பொருட்களில் விலை உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 568 குறைந்து ரூ.37,904க்கு விற்பனையாகி வருகிறது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 விமானங்கள் இயக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!
மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.71 குறைந்து ரூ.4,738க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போரால் கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை அதிகரித்தது. எதிர்பாரத விதமாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.