1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் திறப்பு!
டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்ததால் ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தற்போது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் துவங்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியா முழுவதுமே கொரோனாவின் தாக்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்கள் அல்லாடி கொண்டிருக்கின்றனர். அரசும் இந்த கொரோனவை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்தனர். சமூக இடைவெளிகளை கடைபிடிக்குமாறும், மாஸ்க் அணிந்து தான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டது. மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
TN TRB வெளியிட்ட முக்கிய உத்தரவு – ஆசிரியர்கள் அதிர்ச்சி, வலுக்கும் போராட்டம்!
இது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து கொண்டுதான் இருந்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூடாமல் தேவையான நேரத்தில் மட்டும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
தற்போது நர்சரி முதல் 8 வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க முடிவு செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கும் அபராத தொகை ரூ.500 ஆக குறைக்கப்பட்டு விட்டது. கொரோனா தாக்கம் குறைந்தாலும் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.