உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 விமானங்கள் இயக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

0
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 விமானங்கள் இயக்கம் - மத்திய அரசு நடவடிக்கை!
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 விமானங்கள் இயக்கம் - மத்திய அரசு நடவடிக்கை!
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 விமானங்கள் இயக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

உக்ரைனில் தற்போது போர் சூழலில் எல்லை மீறி இருக்கும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்கும்படியாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், இன்று (பிப்.26) 2 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மீட்பு பணி

உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் சூழல் இன்னும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று உக்ரைன் மீதான தனது முதல் தாக்குதலை நடத்திய ரஷ்யா தொடர்ந்து இன்று (பிப்.26) மூன்றாவது நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த போரில் இதுவரை இரு தரப்பினருக்கும் பெரிய அளவிலான பொருள் சேதமும், 1000க்கும் மேற்பட்ட உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் போர் பதற்றத்தால் வீட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் பதுங்கு குழிக்குள்ளும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் உக்ரைனில் போருக்கு இடையே சிக்கி தவிப்பதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தது. இதையடுத்து இந்திய மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுவதாக புதின் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று (பிப்.25) உக்ரைனில் இருந்து இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், மக்கள் என பலர் ருமேனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTR பதிவுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் மற்றும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இன்று (பிப்.26) 2 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைனில் தற்போது போர் உச்சமடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து விமானங்கள் இயக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியர்களை அழைத்து வருவதற்காக உக்ரைனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் பாதி வழியில் திருப்பிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!