தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது எல்கேஜ, யுகேஜி வகுப்புகளை கைவிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16ம் தேதி முதல் திறக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திறந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரிடம் மனு வழங்கல்!
ஏனெனில் குழந்தைகளுக்கான இந்த வகுப்புகள் கொரோன பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் போதுமான நிதி இல்லாத காரணத்தால் எல்கேஜ, யுகேஜி வகுப்புகளை நடத்துவதை கைவிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்ததால் எல்கேஜி,யூகேஜி வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி எல்கேஜி,யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் கொண்டு வரப்பட்டு மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்தது.
தமிழகத்தில் மார்ச் 1 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு!
ஆனால் தற்போது அரசுப்பள்ளிகளில் போதுமான அளவு நிதி இல்லாத காரணத்தாலும் அத்துடன் சிறிய குழந்தைகளை பாதுகாக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாலும் எல்கேஜி,யூகேஜி வகுப்புகள் ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் சமூக நலத் துறையின் கீழ் செயல்படுவதால் குழந்தைகளுக்கான வகுப்புகள் அத்துறையின் கீழ் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.