மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் சுயமதிப்பீடு தேர்வு அறிவிப்பு
எனவே,அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சுயமதிப்பீடு செய்து அதற்கேற்ப சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,358 பள்ளிகள் இயங்குகின்றன.இவற்றில் சுமார் 2.58 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பிரிவாக ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சுயமதிப்பீடு செய்து சிறப்புப்பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.