தமிழக மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழக மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழக மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் நாளை (மே 6) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன் படி அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் நாளை முதல் அலுவலகத்திற்கு வர தேவை இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி நாளை (மே 6) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. மாநில அரசின் அறிவுறுத்தலின் படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டும் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தவிர தேநீர் கடைகள், மார்கெட்டுகள், மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பலத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்சிஏ, எம்பிஏ மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!

அந்த அறிக்கையில், ‘கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் தினமும் சுழற்சி முறையில் இயங்க வேண்டும். மேலும் நாளை (மே 6) முதல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டியதில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!