தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) ஆலோசனை நடத்துகிறார். இதில் பள்ளிகளை திறப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்று காரணமாக மே மாதம் முதல் மாநிலம் தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து வாரந்தோறும் நீட்டிக்கப்பட்டு வந்து தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. அந்த வகையில் காய்கறி, மளிகை கடைகள், சலூன்கள், பார்கள், அலுவலகங்கள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு போக்குவரத்துக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது.
US ஓபன் டென்னிஸ் போட்டி – ரபேல் நடால் விலகல், இதுதான் காரணம்!
எனினும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள நோய் தொற்று சூழலை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) காலை 11 மணியளவில் துவங்க உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – 8 மடங்கு அதிகரிப்பு!
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் நோய் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என தெரிகிறது. அதே நேரத்தில் செப்டம்பர் முதல் துவங்க உள்ள பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 21) மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.