தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுமா – முதல்வரின் முடிவு என்ன
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இடையில் கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இயங்கி வந்த நிலையில் தொற்று கடுமையாக உயர்ந்த காரணத்தால் முற்றிலும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இ பாஸ் தளர்வை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதனை தொடர்ந்து நேற்று, இபாஸ் விதிகளில் மேலும் சில தளர்வை அறிவித்துள்ளது
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வது மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது போன்று பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளதாக முதல்வர் அறிவித்து உள்ளார். இதனால் பேருந்துகள் இயக்குவது பற்றிய அறிவிப்புகள் வெளியாகுமா என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்