அரியர் தேர்வுகள் கட்டாயம் ..! – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அரியர் தேர்வுகளை கட்டாயம் நடத்தும் முனைப்பில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. தற்போது அரியர் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களை அதற்கான கட்டணம் செலுத்துமாறு பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அரியர் தேர்வுகள் 2020 :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தொற்றின் தாக்கம் குறையாததினால் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டது.
TN Police “FB Group” Join Now
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்வியாளர்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையிலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டது.
அரியர் தேர்வுகள் கட்டாயம் !!
தற்போது அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை, அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு வளாகங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் அறிவியல் பாடங்களுக்கான கட்டணங்களை வருகின்ற டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |