தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ள வழக்கில் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உள்ளனர்.
இடஒதுக்கீடு வழக்கு:
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் சிலவற்றில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு 1993ம் ஆண்டு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதை பின்பற்றியே வேலைவாய்ப்பு, கல்வி, பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை போன்றவற்றில் இந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் இத்தகைய இடஒதுக்கீடு முறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 15 இல் துவக்கம்!!
இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரது மனுவில், OC பிரிவை சேர்ந்தவர்களுக்கு பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் உட்பட பலவற்றில் இடம் கிடைப்பதில்லை. எனவே தற்போது அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டை 50% ஆக குறைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், இந்த வழக்கையும், மராத்தா இடஒதுக்கீடு வழக்கையும் ஒன்றாக விசாரிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
1 முதல் 5ம் வகுப்பு வரை மார்ச் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்