அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 15 இல் துவக்கம்!!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி மாணவர் சேர்க்கை வருகிற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொழிப்பயிற்சி படிப்புகள்:
தஞ்சை மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் பல பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த இடங்களை நிரப்ப நேரடி மாணவர் சேர்க்கை வருகிற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம்.
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
14 வயது நிரம்பிய ஆண், பெண் என இருபாலரும் இந்த படிப்புகளில் சேரலாம். இந்த பயிற்சியில் சேரும் பெண்களுக்கு கணினி பயிற்சி மற்றும் டெக்னீசியன், மெக்கட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. 15 ஆம் தேதி நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
தாய் மொழியில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு – பிரதமர் மோடி உரை!!
இதில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உடனடியாக கிடைக்கும். மேலும் இந்த அரசு தொழில்பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசு பயண அட்டை, மற்றும் தமிழக அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள் என அனைத்து சலுகைகளும் அரசு சார்பில் வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்