தமிழகத்தில் பள்ளிக்கு வராத 12ம் வகுப்பு மாணவர்களின் நிலை – கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத 12ம் வகுப்பு மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பிறகு பொதுத்தேர்வு நடத்த கல்வித்துறை தயாராகி வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இதற்கு தலைமை வகித்த மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் அவர்கள் கூறும்போது, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எவ்வாறு தயாராகி உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள மாவட்ட அளவில் தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுவரை பள்ளிக்கு வராத 12ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை சேகரித்து அவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு காரணத்தை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடல் – அரசு உத்தரவு!!
அதுமட்டுமின்றி பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக ஆலோசனை வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் வகுப்புகள் குறைந்த நாட்களே நடைபெறும் என்பதால், அதற்குள் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன், 12ம் வகுப்பிற்கான செய்முறை தேர்வுகளை நடத்த முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.