12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு பெயர் பட்டியல் சரிபார்க்க அறிவுறுத்தல் – அரசு தேர்வு இயக்குனர்!!
2021ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகள் சரிபார்க்க அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி உத்தரவிட்டுள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
வழக்கமாக 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறும். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இருப்பினும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களின் நலன் கருதி பாடங்கள் முதலில் இருந்து நடத்தப்பட்டது.
பார் கவுன்சில் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு!!
பாடங்கள் குறைப்பு:
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து பதட்டம் அடையக் கூடாது என்ற நோக்கில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான படங்களில் இருந்து 30% குறைத்து அறிவித்தது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்க உள்ளது.
மாணவர்களின் விவரங்கள்:
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பள்ளிகளின் மூலமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டது. தற்போது அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை அனைத்து தலைமை ஆசிரியர்களும் வரும் மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் தங்கள் பயனாளர் அடையாள குறியீட்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்