12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு நாளில் செய்முறை தேர்வுகள் – CEO ஆலோசனை!!!
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் வேறு நாட்களில் நடத்துவதற்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்கள்:
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவி வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. 2020 டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்ததால் பள்ளிகளை திறப்பதற்கு அரசு அனுமதியளித்தது. இதனால் ஜனவரி மத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆசிரியர் கழகத்தினர் தீர்மானம்!!
பொதுத்தேர்வு:
பள்ளி திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். பொதுத்தேர்வுக்கு குறைந்தபட்ச நாட்களே இருந்ததால் அரசு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து 30% குறைத்து அறிவித்தது. மேலும், தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு:
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின் படி மே 5ம் தேதி முதல் தொடங்கி மே 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16 ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், செய்முறை தேர்வுக்கான வினாத்தாள்கள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்