
முன்கூட்டியே வெளியாக போகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…!! சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்…!!
தமிழகத்தில் 12 ஆம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், இத்தேர்வை சுமார் 10 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினார். அதனைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணியானது, தமிழகம் முழுவதும் 78 மையங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் இதில், கிட்டத்தட்ட 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், மே 9 தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முன்னரே இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிடித்தம் செய்யப்படுத்தா..?? இதை செய்தால் போதும் இனி அபராதம் கட்ட தேவையில்லை..!!
அதாவது, பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையானது வரும் மே 5 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்வு முடிவுகள் லேட்டாக கிடைத்தால் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு இது பின்னடைவாக அமையும் என்பதால் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























