திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் 90 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் அனுமதி:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் மளிகை கடைகள், சுற்றுலா தலங்கள், கோவில்கள் ஆகிய பொது இடங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கு சில வழிகாட்டு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பக்தர்களின் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. மீண்டுமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பக்தர்களில் பாதியளவு குறைக்கப்பட்டு தினமும் 15,000 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வர முடியாத பக்தர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 300 ரூபாய் செலவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் அடுத்து வரும் 90 நாட்களுக்குள் சுவாமியை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தொடர்ந்து சளி, காய்ச்சல் போன்ற உடல்நல குறைபாட்டுடன் காணப்படும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.