வேலையில்லாத இளைஞரா? அப்போ மாதம் ரூ.2500! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட சத்தீஸ்கர் அரசு!
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் அரசு தனது மாநிலத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதவித்தொகை
நாட்டில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வேலையில்லா நிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தற்போது இளைஞர்கள் மத்தியில் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதனால் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, சத்தீஸ்கர் மாநில அரசு இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகையை (unemployment allowance) வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். அதன்படி, வேலையற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வேலையில்லா உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Exim வங்கியில் Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
அத்துடன் அடுத்த நிதியாண்டு முதல் இந்த உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் ட்வீட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.