மார்ச் 25 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதால் நாளை (மார்ச் 25) உள்ளூர் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள பழைமையான தளங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவில். பொதுவாக பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்தப்டுடுவது வழக்கம், ஆனால் சில ஆண்டுகளாக இந்த தேரோட்டம் காலம் கடந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பல சிறப்புகளை கொண்ட ஆழித்தேரோட்டம் விழா நாளை(மார்ச் 25) வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இந்த தேரோட்டம் நாளை காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, காலை 7,30 மணி அளவில் அழித்தேரோட்டம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
சிவில் சர்விஸ் நேர்முக தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் தொடக்கம்!!
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த தேரோட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தடுக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.