திருப்பூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 24 நடைபெறும்!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலையற்றோர் எண்ணிக்கையை குறைக்க மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்குகின்றனர். இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு, பி.இ, ஐடிஐ முடித்தவர்கள் முதல் பலர் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் திறன் மேம்பாடு பயிற்சிக்கு ஆட்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழக அரசாணைகளில் தமிழ் மொழி கட்டாயம் – பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சுற்றறிக்கை!!
மேலும் அயல் நாடு நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழில் தொடங்க உள்ளவர்களுக்கான ஆலோசனைகள், மேலும் முன்னணி வங்கிகளில் கடன் பெறுவதற்கான ஆலோசனை போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த முகாம் குறித்த கூடுதல் விவரங்கள் பெற 0421-2971152 அல்லது 94990-55944 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்