ஒருவழியாக முடிவுக்கு வந்த மின் ஊழியர்களின் போராட்டம் – முதல்வர் நடத்திய பேச்சு வார்த்தை!
புதுவையில் அரசின் மின் துறையை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மின்சார துறை அமைச்சருடன் முதல்வர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
ஊழியர்கள் போராட்டம்:
புதுச்சேரியில் மின்சார துறையை தனியார்மயமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மின் துறை பொறியாளர்கள் மற்றும் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று 5வது நாட்களாக வேலை நிறுத்தமும் செய்தனர். இந்த தொடர் வேலை நிறுத்ததால் மின் சார்ந்த மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை சரி செய்ய ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஓரளவு மின் விநியோகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை துணை நிலை ஆளுநர் மின்சார துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் துணை மின் நிலையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் 16 துணை மின் நிலையங்களில் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் புதுவையில் போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய துணை ராணுவப் படை இறக்கப்பட்டது.இந்த நிலையில் போராட்டம் குறித்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் மின்துறை அமைச்சர், மின்துறை இயக்குநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மின்துறை அமைச்சர், மின்துறை ஊழியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு கிட்டியதை அடுத்து 6 நாட்களாக நடைபெற்ற போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்