“ரூ. 2,000 நோட்டுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்… ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு…!!
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, அனைத்து வங்கிகளிலும் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ‘தற்போது, 98.15% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக’ தெரிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (07-02-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..
மேலும், ‘ரூ. 6,577 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளதாக’ தெரிவித்துள்ளது. மேலும், ‘ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்ட இந்த நோட்டுகள் இனிமேல் செல்லாது’ எனவும் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் தங்கள் அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் மூலம் விரைவாக மீதி இருக்கும் பணங்களை டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.


























