ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
கோவாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் அதிகமாக பதிவாகி வருவதால், ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவலை தொடர்ந்து கோவா மாநிலத்தில் கடந்த மே மாதம் 9 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த இவ்வித கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 16 வரை நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 8) பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா – 447 பேர் உயிரிழப்பு!
இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு தளர்வில் கோவா மாநிலம் முழுவதும் பெரும்பான்மையான செயல்பாடுகள் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டுமாக துவங்கியது. அதன் படி இதுவரை கடைகள் மற்றும் மால்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. தவிர சலூன் கடைகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம், அரங்கம் அனைத்தும் திறந்த நிலையில் இயங்க அனுமதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இருப்பினும் மற்ற மாநிலங்களில் இருந்து கோவா வருபவர்களுக்கு கொரோனா எதிர்மறை சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவில் நேற்று (ஆகஸ்ட் 8) ஒரு நாளில் 69 புதிய பாதிப்புகளுடன் 1 இறப்பு பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.