இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா – 447 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,19,69,954 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 50,86,64,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. புதிதாக 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,28,309 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்று அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக ஒரே நாளில் 39,686 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கண்ணம்மா நள்ளிரவில் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – வெளியான ப்ரோமோ!
இதுவரை இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,11,39,457 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் பாதிப்புகள் முற்றிலும் குறையாததால் மருத்துவமனையில் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 4,02,188 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.