தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை பரவல் – மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?
தமிழகத்தில் நோய் தாக்கம் குறைந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா மீண்டும் பரவி நான்காவது அலை ஜூன் மாதத்தில் தொடங்கும் என ஐஐடியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு:
சீனாவில் உருவெடுத்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் அதிக இன்னல்களை அடைந்தனர். இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் என அனைவரும் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இந்த தொற்றால் உலகமே பேரழிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலை என தொடங்கிய கால கட்டத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டு இருந்தது, கொரோனாவின் வேகம் உச்சத்தை தொட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு முழுவீச்சில் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
முதல், இரண்டாம் & மூன்றாம் அலை என மூன்று அலைகளை சந்தித்த தமிழக மக்கள் தற்போது தான் நோய் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளை நீக்கலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. ஆனால் இந்த இயல்பு நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்ற தகவல் அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நோய் பரவல் காரணமாக சீனாவின் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இனி காலை 8 மணிமுதல் 11:30 மணிவரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் தமிழக முதல்வர் சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மீண்டும் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து 4வது அலை உருவாகுமோ? என்ற அச்சத்தில் அனைவரும் உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐஐடியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நான்காவது அலை ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சத்தை எட்டும் என்று கணித்துள்ளனர். இருப்பினும் சில தொற்று நோயியல் நிபுணர்கள் ஐஐடி ஆய்வை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலானோர் நோய்த்தொற்று உள்ளாகி அதன் மூலம் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர் மற்றும் தடுப்பூசியும் அதிகளவில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் நான்காவது அலை வந்தாலும் அதிக அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறியுள்ளனர்.