இனி காலை 8 மணிமுதல் 11:30 மணிவரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் காலை 8 மணி முதல் 11:30 மணி வரை குறைக்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் செயல்படும் நேரங்களை காலை 8 மணி முதல் 11:30 மணி வரை குறைக்கப்படும் என தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் தெலுங்கானாவில் பள்ளிகள் செயல்பாடும் நேரம் ஒரு வாரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது, வெப்ப அலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் காலை 8 மணி முதல் 11:30 மணி வரை செயல்படலாம். மதிய உணவு காலை 11:30 மணிக்கு முன் வழங்கப்படும். இந்த புதிய பள்ளி நேரங்கள் மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
இதற்கு முன்னதாக, தெலுங்கானாவில் பள்ளி நேரம் காலை 7.45 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும் என்றும் பள்ளி கடைசி வேலை நாளான மே 20 வரை இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது தெலுங்கானா மாநில வளர்ச்சி திட்டமிடல் சங்கத்தின் (TSDPS) கணிப்பின்படி, மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹைதராபாத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் உயர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.